சேலம், ஜூலை 18- சேலம் மாநகரில் நிகழும் சுகாதார சீர்கேட்டால் கொசு உற்பத்தி அதிகரிப் பதை தடுக்கக் வலியு றுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் ஆட்சி யர் அலுவலகம் முன்பு கொசு வலை அணிந்து நூதன முறை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகரப் பகுதியில் 60 வார்டு உள்ளது. அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் இதுவரை சரிவர மூடாமல் குண்டும் குழியு மாக உள்ளது. ஆகவே உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும். மாந கர் முழுவதும் சாக்கடை சுத்தம் செய்யாம லும், தூர்வாரப்படாத நிலையில், சாக் கடை நீர் ஆங்காங்கே தேங்கி அதன் மூலம் உருவாகும் கொசுக்களால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க வேண் டும். மேலும், சேலம் மாநகர பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசுவலை அணிந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சேலம் மாநகராட்சி நிர் வாகத்தையும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.