tamilnadu

img

கோவை மாநகராட்சியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் குறை தீர்ப்பு முகாம் துவக்கம்

கோவை, ஜூலை 3-  கோவை  மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத்  தலை மையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு புதனன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மாநகராட்சி ஆனையரிடம் மனுக்களை அளித்தனர்.  இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் செய்தி யாளர்களிடம் கூறுகையில், 4 ஆண்டுக ளுக்கு பிறகு கோவை மாநகராட்சி குறை தீர் கூட்டம் துவங்கப்பட்டுள்ளது. இனி மேல் வாரந்தோறும் புதன்கிழமை நடத் தப்படவுள்ளது. 100 வார்டுகளில் உள்ள மக்கள் தங்களது குறைகளை நேரடியாக வந்து தெரிவிக்கலாம். மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 8 மணிமுதல் 11 மணிவரை இந்த இந்த குறைதீர் கூட்டம் நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்றார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கோவை மாநகராட் சியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்து வது பல்வேறு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், கோவை நகரில் குடிநீர்  பிரச்சனை என்பதில்லை. 4-6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படு கிறது. மழைநீர் சேமிப்பை பயன்பாட் டுக்கு கொண்டு வர மக்களை கேட்டுக் கொள்கிறேன். அனைத்து அலுவலகங்க ளிலும் கட்ட உத்தரவிட்டுள்ளோம். புதிதாக வீடு கட்ட மழைநீர் சேமிப்பு அமைப்பில்லா மல் அனுமதி கொடுப்பதில்லை. அதற்காக ஒவ்வொரு வார்டிலும் 3 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் ஏற்கனவே உள்ள கட்டிடத்திலும் இந்த அமைப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்படும். ஆகஸ்ட் 15 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு, கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும்.  சூயஸ் நிறுவனம் 60 வார்டுகளில் தான் 24 மணி நேர குடிநீர் வழங்கும் பணியை செயல்படுத்தவுள்ளது. அதற் கான முன்னோட்டமாக தற்போது ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்து வருகிறது.  சூயஸ் நிறுவனம் எந்தவித பணமும் வசூலிப்ப தில்லை. மாநகராட்சி மூலம் தான் குடிநீருக் கான கட்டணம் வசூலிக்கப்படும். இதைத் தொடர்ந்து சூயஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டால் வரியை உயர்த்துவோம் என ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ளதே என்கிற கேள்விக்கு, பராமரிப்பு மட்டுமே  சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளும்  என்று மலுப்பலாக பதிலளித்தார். மேலும்,  இந்த திட்டம் ஒவ்வொரு வீடுகளிலும் முறையாக மீட்டர் செயல்படுத்த வழி வகுக்கும் என சூயஸ் குறித்த அடுத்தடுத்த கேள்விகளுக்கும் இந்த பதிலையே திரும்பத்திரும்ப அளித்தார்.