கோவை மாநகர காவல் ஆணையருடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் திடீர் மாற்றம்
கோவை, மார்ச் 11– மத அடிப்படைவாதிகளால் கோவை மாநகரில் ஏற்பட்டுள்ள பதட்ட சூழலை எவ்வாறு தனிப்பது என்பது குறித்து ஆலோ சனை மேற்கொள்ள டிஜிபி திரிபாதி புத னன்று கோவை வந்தார். கோவை மாநகரில் கடந்த ஒரு வார கால மாக தொடர்ந்து விரும்பத்தகாத சம்பவங் கள் நடைபெற்று வருகிறது. இதனால் நக ரின் பொது அமைதி கேள்விக்குள்ளாகி யுள்ளது. இது முழுக்க உளவுத்துறையின் தோல்வியே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை மாந கரின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும், நகரின் அமைதியை மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்ச ரணிடம் ஆலோசனை மேற்கொள்ள டிஜிபி திரிபாதி கோவை வந்தார். இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவ லகத்தில் கூடுதல் ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு ஜெயந்த் முரளி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் இக்கூட்டத்தில் பங் கேற்றனர். டிஜிபி திரிபாதி சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை மேற்கொண்டார்., இதனிடையே உளவு பிரிவின் தோல் வியே கோவை மாநகரில் ஏற்பட்டுள்ள பதட் டத்திற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கோவை சிறப்பு நுண் ணறிவு பிரிவு (எஸ் ஐ.சி) உதவி போலீஸ் கமி ஷனர் வெற்றிச் செல்வன் திடீர் மாற்றம் செய் யப்பட்டார். இவர், காத்திருப்போர் பட்டி யலில் வைக்கப்பட்டு புதிய உதவி போலீஸ் கமிஷனராக மத்திய பகுதி குற்ற பிரிவு உதவி கமிஷனராக பணி புரிந்த சந்திரசேகரன் நிய மிக்கப் பட்டார். இவர் புதன் கிழமையன்றே உடனடியாக பதவி ஏற்றுக் கொண்டார்.
எர்ணாகுளம் – ராமேஸ்வரம் இடையே சிறப்பு வாராந்திர ரயில்
கோவை, மார்ச் 11- எர்ணாகுளம் - ராமேஸ் வரம் இடையே ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளத்திலிருந்து கிளம்பும் ரயில் ஏப்ரல் 2, 9, 16, 23,30, மே 7, 14, 21, 27 மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 7:30க்கு ராமேஸ்வரம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேபோல், ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பும் ரயில் ஏப்ரல் 3, 10, 17, 24 மே 1, 8, 15. 22, 29 மற்றும் ஜூன் 5, 12,19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறு நாள் அதிகாலை 4:30க்கு எர்ணாகுளம் சென்றடை யும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் இந்த ரயில்கள் பொள்ளாச்சி, உடு மலை, பழனி, ஒட்டன்சத் திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம். உச்சிப்புலி மற்றும் மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறி விக்கப்பட்டுள்ளது.
உதகையில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா
உதகை, மார்ச் 11- உதகை காந்தள் பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப் பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங் களை தடுக்க அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட பகு திகளில் உள்ள வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்கா ணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி வங்கி மேலாளர்கள், வணிகர் கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோரை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதில் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உதகை ஜி1 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரோகிணி சந்திப்பு பகுதியிலிருந்து காந்தள் முக் கோணம் வரை 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்காணிப்பு கேமரா அமைக்க காவல் துறையினருடன், புறநகர் வணி கர் சங்கத்தினர் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். அதன் படி வணிகர் சங்கத்தின் சார்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பில் சாலை ஓரங்களில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு 27 கண் காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு அமைப்பினரும் கேமரா பொருத்தினால், பெரும்பாலான குற்றங்களையும், இரவில் ஏற்படும் பிரச்சனைகளையும் குறைக்க முடியும் என்று வணிகர் சங்கத்தினர் கூறினர்.