திருப்பூர், நவ. 21- சொந்த உபயோகத்திற்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை சரக்கு மற்றும் பயணிகள் வாகனங் களாக இயக்குவதால் போக்குவ ரத்துத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், சிறு உரிமையா ளர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என சிஐடியு மோட்டார் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல் லேபர் யூனியன் சார்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு ஆகியோர் திருப்பூர் வடக்கு வட் டாரப் போக்குவரத்து அலுவலர் குமாரிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமையன்று அளித்தனர். இம்மனுவில் கூறப்பட்டுள்ளதா வது, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட அவிநாசி, பெருமாநல்லூர், குன் னத்தூர், ஊத்துக்குளி, பல்லடம், காங்கேயம், வெள்ளக்கோவில், கொடுவாய், பொங்கலூர் உள் ளிட்ட பகுதிகளில் சொந்த உபயோ கத்திற்கு என அனுமதி பெற்று இயக்கப்படும் பல்வேறு வகையான வாகனங்களை தற்போது வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத் துகின்றனர். குறிப்பாக மிகக்கு றைந்த வாடகைக்கு பயணிகளை ஏற்றி செல்வதும், தொழிலக சரக்கு களை ஏற்றி செல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த தொழிலை நம்பி இருக்கும் டாக்ஸி, சுற்றுலா வேன் ஓட்டுனர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள் உள்பட அனைத்து வகைபொது சேவைக் காக இயக்கப்படும் வாகன ஓட்டு நர்கள் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றனர். மேலும், அவர்களுக்கு பெரிய அளவில் வருமான இழப் பும் ஏற்படுகிறது. குடும்ப செலவு, வாகன வரி, பெட்ரோல், டீசல் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இத்தகைய வாகனங்கள் ஆண்டுதோறும் அரசுக்கு வரி, காப்பீடு தொகை உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தி வருகின்றன. ஆனால் தங்கள் சொந்த வாகனங்களை குறைந்த வாடகைக்கு இயக்கி, முறையாக வாடகை தொழில் செய்து வரும் சிறு உரிமையாளர் கள் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவது டன், சட்ட விரோதமாகவும், சட்டத் திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சொந்த உப யோக வாகனங்களின் உரிமையா ளர்கள் மீது அதிகாரிகள் கடுமை யான நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண் டனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட வட்டார போக்குவரத்து அதிகாரி குமார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதேபோல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ் வில் சிஐடியு மோட்டார் தொழிலா ளர் சங்கத்தை சேர்ந்த திரளா னோர் கலந்து கொண்ட