சுற்றுலா பயணிகள் கோரிக்கை
உதகை, அக்.19- நீலகிரி சுற்றுலா தலமான தவளை மலை காட்சிமுனை யில் உள்ள புல் புதரினை அப்புறப்படுத்திட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்று தவளை மலை காட்சிமுனை. இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு ஏதுவாக மாடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மாடத்தின் மீது நின்று இயற்கையின் அழகையும், தவளையை போல் தோற்றமளிக்கும் மலையையும் கண்டு ரசித்து வந்தனர். தற்போது இந்த மாடத்திற்கு செல்லும் பாதையில் புதர் மண்டி கிடப்பதால் சுற்றுலா பயணிகள் சாலையில் நின்றபடி ரசிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த நடைபாதையில் மண்டி கிடக்கும் புதரினை அப்புறப்படுத்திட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.