மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு பொதுக்கூட்டம் குரல்குட்டை பகுதியில் புதனன்று நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு கிளை செயலாளர் செல்லமுத்து தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் முதல் தவணையாக 80 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலதண்டபாணி, ஜெகதீசன், பழனிச்சாமி, ராஜகோபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.