tamilnadu

img

முதல் சுற்றுக்கான தண்ணீர் முறையாக திறக்கவேண்டும் பிஏபி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பொள்ளாச்சி, பிப்.24- பரம்பிக்குளம் ஆழியார் பாச னத்திட்டத்தின் மூலம் முதல்  சுற்றுக்கான தண்ணீரை முறை யாக குறிப்பிட்ட காலத்திற்குள் திறந்துவிடக்கோரி, பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர்  பிஏபி அலுவலகத்தினை பழைய ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தி னர் முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி தாலுகா மற்றும் ஆனை மலை, கோட்டூர், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பரம் பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தின் மூலம் தமிழகம் மற்றும்  கேரளா இரு மாநிலங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர்  திறந்துவிடப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு ஓராண்டிற்கு சராச ரியாக 7.1/2 (கால்) டிஎம்சி அளவு தண்ணீர் திறக்கப்படவேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டில்  பழைய ஆயக்கட்டு பாசனத்திற் கான முதல் சுற்றிற்கான தண் ணீரை, ஒப்பந்த விதிகளின்படி மே மாதத்தில்  திறக்கப்படாமல், செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட தால் பயிர் கருகி பெரிய அளவி லான இழப்பை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, ஒப்பந்த விதிகளின் படி வழங்கப்படவேண்டிய தண்ணீரை கேரளம் மற்றும் தமிழ கத்திற்கு குறித்த காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இம்முற்றுகை போராட்டத் திற்கு பழைய ஆயக்கட்டு விவசா யிகள் சங்கத்தின் தலைவர் ராஜா மணி தலைமை வகித்தார். இந்நி லையில் வேட்டைக்காரன்புதூர் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம்  (பிஏபி) செயற்பொறியா ளர் நாகேந்திரன் மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத் தின் தலைவர் ராஜாமணி மற்றும்  செயலாளர் வித்யாசாகர், பொரு ளாளர் லோகநாதன், ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தையில் பழைய ஆயக்கட்டு விசவாயிகள் சங்கத் தின் கோரிக்கைகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கவனத் திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும்  கலைந்து சென்றனர். இதில்  ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.