tamilnadu

img

சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றிடுக

நாமக்கல், ஜூலை 28- சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 ஆவது நாமக்கல் மாவட்ட மாநாடு கவீன் கிஷோர் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று மாவட்டத் தலைவர் எம்.கணேசபாண்டி யன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பி.செல்வராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணை தலைவர் கு.சிவராஜ் வரவேற் புரையாற்றினார். இம்மாநாட்டை மாநில துணைத் தலைவர் சி.பழனிச்சாமி துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி வாழ்த்தி பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் சி.துரைசாமி அறிக்கையை முன்வைத்து பேசினார்.

தீர்மானங்கள்

சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழ அரசு தனிச்சட்டம் இயற்ற வேண் டும். மாட்டு இறைச்சி உணவை உண்ப வர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் மலம் மற்றும் சாக்கடை கழிவு களை கையால் சுத்தம் செய்வதை தடுத்து நிறுத்தி இயந்திரம் மூலம் பயன்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் திருமண மண்ட பங்களில் தலித் மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.  தாழ்த்தப்பட்ட பகுதிகளில் சுய உதவி குழு என்ற பெய ரில் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் கந்துவட்டி போல் வசூல் செய்வதை கைவிட வேண் டும். அரசுக்கு சொந்தமான கோவில்க ளில் தலித் மக்கள் வழிபாடு செய்ய அனு மதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 

புதிய நிர்வாகிகள் தேர்வு

இதனையடுத்து புதிய மாவட்டத் தலைவராக எம். கணேசபாண்டியன், மாவட்ட செயலாளராக கே.தங்கமணி, மாவட்ட பொருளாளராக எஸ்.ஆறு முகம், மாவட்ட துணை தலைவர்களாக எம்.அசோகன், பி.பெருமாள், பி.செல்வ ராஜ், ஜீ.கோபி, மாவட்ட துணை செய லாளர்களாக  சி.துரைசாமி, கு.சிவராஜ், ஆர்.சந்திரமதி, இ.கோவிந்தராஜ் உள்ளிட்ட 31 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு  செய்யப்பட்டது.  மாநில துணைத் தலைவர் ஆர்.குழந் தைவேல் நிறைவுரையாற்றினார். முடி வில் மாவட்ட பொருளாளர் எஸ்.ஆறு முகம் நன்றி கூறினார்.