இந்தியாவின் ஆன்மா கிரா மப்புறங்களில் உள்ளது என்ற நிலை பழங்கதையாகி விட்டது. விவசாயம் பொய்த்துப் போன தால் அதனை நம்பியிருந்தவர்கள் நகர்ப்புறங்களை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் நகரங்களை நோக்கி வரும் மக்க ளுக்கு பொழிவுறு நகரங்கள், சீர் மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) என்னும் பெயரில் மத்தியில் ஆளும் அரசுகள் நகரங்களை மறு கட்டுமானம் செய்து வருகிறது. இத்திட்டத்தில் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என்கிற பல இடங்களில் குடிநீர் விநியோ கத்தை தனியாருக்கு விடும் நாச கார செயலை வேகமாக செயல்ப டுத்தி வருகிறது. குறிப்பாக, கோவை, ஈரோடு போன்ற மாநக ரங்களில் சூயஸ் போன்ற வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், அபெக்ஸ் போன்ற உள்நாட்டு தனியார் நிறுவனங்களும் குடிநீர் விநியோக உரிமை தாரைவார்க் கப்பட்டுள்ளது. இதேபோல் உதகை போன்ற சுற்றுலா தளங்க ளிலும், பல நகராட்சிகள், பேரூ ராட்சி பகுதிகளிலும் வாட்டர் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோடை வாட்டி வரும் நிலையில் ஏற்கனவே ஈரோடு மாநகரில் நிறுவப்பட்டிருந்த வாட்டர் ஏடிஎம் களை நோக்கி மக்களை மறைமுக மாக தள்ள விரட்டி வருகிறது மாநக ராட்சி நிர்வாகம். கடந்த சில தினங் களாக மாநகராட்சி பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில், வேறு வழியின்ற மக்கள் தனியார் ஏடிஎம் நோக்கி செல்ல துவங்கியுள்ளனர். இங்கு ஒரு லிட்டர் குடிநீர் ரூ.1 என வும், 20 லிட்டர் ரூ.7 எனவும் விற் பனை நடைபெறுகிறது. சூரம்பட்டியில் அமைக்கப்பட் டுள்ள சுமார் 1000 லிட்டர் கொள்ள ளவுள்ள டேங்க் தினமும் 6 முறை நிரப்பப்படுகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் குடிநீர் விற்பனை ஜோராக நடைபெறு கிறது. அங்கேயே வாட்டர் ஏடிஎம் ரீசார்ஜ் செய்யும் பணியும் நடைபெறுகிறது.
சில்லரையா கவும் பணம் செலுத்தி தண்ணீரை பிடிக்கலாம். கார்டு மூலமும் தண் ணீர் பெறலாம் என பணம் பறிப்ப தற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, அப்பணிக்காகவே ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இனி, இந்த வாட்டர் ஏடிஎம்-கள் மாநகராட்சி, மாவட்டம் என அடுத் தடுத்து விரிவுபடுத்தப்பட்டு கார்ப்பரேட் கைக்கு மாறும் பணி துவங்கும் என்பதில்லை எவ்வித சந்தேகமில்லை. இனியேனும் விழித்திருப்போம். -ராஜ்வேல்