கோவை, மே 13 - ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோவை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கததினர் வயிற் றில் ஈர துணி கட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசானது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இதேபோல் மத்திய அரசு வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்த முடிவெ டுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக் கையால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் ஆபத்து உருவாகியுள்ளது. கோடிக்கணக்கான இளை ஞர்கள் வேலை வாய்ப் பின்றி தவித்து வருகிற நிலை யில் ஆளும் ்அரசுகளின் இந்நடவடிக்கை வெந்த புண் ணில் வேல் பாய்ச்சும் நடவ டிக்கையாகும். இதனை கண்டித்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கோவையில் பல்வேறு பகுதிகளில் வயிற்றில் ஈரத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே. எஸ்.கனகராஜ் உள்ளிட்ட மாவட்ட நிர் வாகிகள் பலர் பங்கேற்றனர்.