திருப்பூர், நவ.18– திருப்பூர் மாவட்டத்தில் வீட்டு மனைப் பட்டா மற்றும் குடியிருக் கும் இடத்துக்கு உரிமை ஆவணம் கோரி மாவட்ட ஆட்சியரக குறை தீர்க் கூட்டத்தில் பொது மக்கள் மனு அளித்தனர். திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமை யில் திங்களன்று நடைபெற்றது. திருப்பூர் வீரபாண்டி புளியங் காடு பகுதி மக்கள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: இப் பகுதியில், 1992 ஆம் ஆண்டு மனைகளாக பிரிக்கப்பட்டு 12.25 ஏக்கர் விற்கப்பட்டது. கூலி வேலை செய்யும் ஏழை தொழி லாளர்கள் விலை கொடுத்து வாங்கி பத்திரம் பதிவு செய்து 600க்கு மேற்பட்ட சிறு வீடுகள் மற்றும் குடிசைகள் போட்டு கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்கு 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவி ளக்கு, தார்சாலை வசதி, வீடுக ளுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த இடம் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், மேற்படி இடத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என்றும் பத்திரம் பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. மேற்படி இடத்தில் வசித்து வரும் பொது மக்கள் நிர்க்கதியாக்கப்பட்டது போல உணர்ந்து பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங் குள்ள அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழக் கூடிய வர்கள். எனவே சம்பந்தப்பட்ட பகுதியை தங்களுக்கு உரிமை யானதாக மாற்ற ஆவணம் செய் யுமாறு கேட்டுக் கொண்டனர்.
கள்ளிமேடு பட்டா ரத்து?
திருப்பூர், கணபதிபாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், கடந்த 2002 ஆம் ஆண்டு திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் ஜெய லலிதா நேரடியாகப் பங்கேற்று, கள்ளிமேடு பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட் டது. ஆனால், நீண்ட காலமாக அதனை அளந்து தர அரசு அதிகா ரிகள் மறுத்து வந்தனர். இந்த நிலை யில், தற்போது 150 நபர்களில் ஒரு சிலருக்கும், புதியதாக 50 பேருக்கும் இதே இடத்தில் பட்டா வழங்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கேட்டால் அவர்களது பட்டா ரத்து செய்யப் பட்டு விட்டது எனக் கூறுகின்ற னர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
அடமான நகையை மீட்க மனு
திருப்பூர் மாவட்டத்தில் பல்ல டம் மற்றும் சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சிறு விசைத் தறி உரிமையாளர்கள் வங்கி யில் பெற்ற கடனை தள்ளுபடி செய்யும்வரை விசைத்தறி கடன் வசூலை நிறுத்தி வைக்க கோரி யுள்ளனர். இந்நிலையில், விசைத் தறிக்கு பெறப்பட்ட கடனை அடைக்க வங்கியில் நகை அட மானம் வைத்து வட்டி கட்டி னோம். ஆனால், நகையை மீட்க பணம் கட்டினால், வங்கியாளர் அனுமதிக்காமல் விசைத்தறி கடனை அடைத்தால் மட்டுமே அடமான நகையை திருப்பித் தருவோம் என நெருக்கடி கொடுக் கின்றனர். மேலும், நகை ஏலம் விடுவதாகவும் நோட்டீஸ் அனுப் பியுள்ளனர். எனவே நகைக்க டனை அடைத்து நகையைத் திரும்ப பெறவும், தங்கள் சொத் துக்களை ஏலம் மற்றும் சொத்து கையகப்படுத்துதல், ஜப்தி நட வடிக்கைகளை நிறுத்தி வைக்க வும் கோரினர். மேலும் விசைத்தறி கடனை தள்ளுபடி செய்யும் வரை வங்கி கடன் வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமேன கேட்டுக் கொண்டனர்.
தலித் நிலம் ஆக்கிரமிப்பு
திருப்பூர், காங்கயம் வட்டம் ஊதியூர் காசிலிங்கம்பாளை யத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அளித்த மனுவில், நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் 45 ஆண்டுகளுக்கு முன் பெற்ற 2.5 ஏக்கர் நிலத்தில், கடந்த 15 நாட்களுக்கு முன் பாக ராஜா வெடிமருந்து தொழிற் சாலையினர் 25 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து அங்கு கம்பிவேலி அமைத்துள்ளார். இதுகுறித்து தொழிற்சாலையினரிடம் கேட் டால், தலித் என்பதால், சாதிய கண் ணோட்டத்துடன் மிரட்டல் விடுக் கின்றனர். எனவே இதன் மீது தாரா புரம் சார்ஆட்சியர்் தலைமையில் விசாரணை செய்து நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். திருப்பூர் நெரிப்பெரிச்சல் பகுதி மக்கள், சுப்பராயன் எம்.பி. யின் சிபரிசு கடித்தத்துடன் அளித்த மனுவில் கூறியிருப்பது: இப்பகுதி யில் கடந்த 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 40 குடும்பங்க ளுக்கு பட்டா வழங்க கோரி மனு கொடுத்துள்ளனர். இம்மனுக் களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும். தற்போது வருவாய் துறையினர் மூலம் பட்டா வழங் குவதற்கான நிர்வாக பணிகள் யாவும் நிறைவு பெற்றுள்ளன. ஆனால் பட்டா வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டு வரு கின்றது. எனவே மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் எடுத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.