சிலம்ப பயிற்சி வீடியோ வெளியீடு
சென்னை, ஜூன் 1- *உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாதிருக்க உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனால் பலதரப்பட்ட மக்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், மாணவ, மாணவிகள் இந்த கொரோனா தனிமையினால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு சரியானதொரு வழிகாட்டலை ஏற்படுத்தவும் காரைக்காலை சேர்ந்த இரட்டையர்களான ஸ்ரீ விசாகன் மற்றும் ஸ்ரீ ஹரிணி ஆகிய இருவரும் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.இதுதொடர்பாக அவர்கள் பேசுகையில்,’’கொரோனா தனிமையால் வாடும் பெற்றோர்களுக்கும், மன அழுத்தத்தால் தவிக்கும் மாணவ மாணவிகளுக்கும் எங்களுடைய அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.