கோவை, ஜூன் 24– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட தலைவர்களில் ஒருவ ரும், சிஐடியு கோவை மாவட்ட மில் தொழி லாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செய லாளருமான தோழர் எஸ்.ஜி.சுப்பையன் (85) திங்களன்று காலமானார். கோவை, சரவணம்பட்டியில் உள்ள கோபாலகிருஷ்ணா பஞ்சாலையில் தொழி லாளியாகப் பணியில் அமர்ந்து, செங்கொடி சங்கத்தின் முன்னணி ஊழியராகப் பரிண மித்து வாழ்நாள் முழுவதும் பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போரா டியவர் தோழர் எஸ்.ஜி.சுப்பையன். மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக சுமார் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவரது உறுதிமிக்க செயல்பாடு, கொள்கை உறுதிபாடு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றின் காரணமாக மார்க்சி்ஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக வும், ஒன்றுபட்ட வடக்கு தாலுகாக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உழைக்கும் மக்க ளின் நலனுக்காகப் போராடினார். இதேபோல் தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக சிஐடியு பஞ்சாலை தொழிலா ளர் சம்மேளனத்தின் மாநில தலைவர்களில் ஒருவராகவும், கோவை மாவட்ட மில் தொழி லாளர் சங்கத்தில் நீண்டகாலம் தலைவரா கவும், பொது செயலாளராகவும் பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக தோழர் எஸ்.ஜி. சுப்பையன் திங்களன்று சரவணம்பட்டி யில் உள்ள அவரது இல்லத்தில் கால மானார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகனும், ஜோதிமணி என்ற மகளும், மனோ கரன் என்கிற மருமகனும் உள்ளனர்.
எஸ்.ஜி.சுப்பையன் மறைவையடுத்து இவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்க தலை வர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சரவணம்பட்டி மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதன் பின் சரவணம்பட்டி கிளை மூத்த தோழர் கே.என்.எம்.ராமகிருஷ்ணன் தலைமை யில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிபிஎம் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணா கரன், எல்பிஎப் தொழிற்சங்க தலைவர் பார்த்தசாரதி, எச்எம்எஸ் சங்க தலைவர் ராசாமணி, ஏஐடியுசி தலைவர் சிவசாமி, எம்எல்எப் சங்க தலைவர் தியாகராஜன், ஏடிபி சங்க தலைவர் கோபால், சிஐடியு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். முன்னதாக நடைபெற்ற இரங்கல் ஊர் வலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.கண்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச்செயலாளர் ஆர்.கோபால் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், சிஐ டியு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.