தருமபுரி, நவ.29- தருமபுரி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியு மாக உள்ளதை செப்பனிடு மாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தருமபுரியின் மையப் பகுதியான வாசு கவுண்டர் தெரு.இப்பகுதியில் மளிகை கடைகள், உணவ கங்கள், மருத்துவமனைகள் உள்பட வணிக நிறுவ னங்கள் ஏராளமாக உள்ளன. மாவட்டத்தின் பல பகுதியிலிருந்து துணி கள் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க தினந் தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வருகை தருகின்றனர். ஆனால் இந்த வாசு கவுண்டர் தெருவில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடிய வாகன ஓட்டி களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சீரற்ற சாலையால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை செப்பனிட மாவட்டம் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.