அவிநாசியில் தெரு நாய் தொல்லை பொதுமக்கள் அச்சம்
அவிநாசி, நவ. 15- அவிநாசி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித் துள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள் ளனர். அவினாசி ஒன்றியம் கருவலூர், பழங்கரை, உப்பிலி பாளையம், வேட்டுபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பத்திரிக்கை வினியோகம் செய்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில் மோதி விபத்துகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் நாய்க்கடி பட்டதால் நடமாடுவதே அச்சம் மிகுந்ததாக மாறியுள்ளது. இதுகுறித்து அவிநாசி பகுதி மருத்துவர்கள் கூறுகை யில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர் எனத் தெரிவித்தனர். எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தெருநாய் தொல்லைக ளில் இருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா
அவிநாசி, நவ. 14- அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சக்தி முருகன் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட கலைய ரங்கம் திறப்பு விழா பென்சனர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா கல்வெட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் திறந்து வைத்தார். இதை யடுத்து இயல், இசை, நடனம் மூலம் மாணவியருக்கு திருக்குறள் கற்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி யில் பள்ளி மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் திருப்பூர் முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், நிறுவனர்முத்து குமரன், நிர்வாக இயக்குநர் பொன்.குணசேகரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திலகவதிநன்றி கூறி னார்.
மின் தடை
தாராபுரம், நவ. 15 - தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மாகேஸ்வரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது, பல்லடம் மின் பகிர்மான வட்டம், தாராபு ரம் கோட்டம், தாராபுரம் 110-22 கேவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனி) நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புற நகர் பகுதிகள், வீராட்சிமங் கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப் பாளையம், வண்ணாபட்டி, உப்பாறு டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தா புரம், செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சா ரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள் ளார்.