tamilnadu

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை முயற்சி

தருமபுரி, ஜூலை 9- தருமபுரி  அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற் கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர் .  தருமபுரி மாவட்டம், கதிர்நாய்க் கன அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் மகள் மணிமொழிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது உற வினரான செந்தில்குமார், கவிதா தம்பதியின் மகன் செங்கவிக்கு திரு மணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சிலதினங்களில் இருந்து  செங்கவி குடும்பத்தினர்  வர தட்சணை கேட்டு மணிமொழியை கொடுமை செய்துள்ளனர்.  மேலும், 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் வாங்கி வர மணிமொழியை  அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். இத னையடுத்து மணிமொழி பெற்றோ ரிடம் இருந்து 5 பவுன் தங்க நகையும் ரூ.2 லட்சம் பெற்று தந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து வர தட்சணை கேட்டு கொடுமை செய்யவே மணிமொழி தன் தாய் வீட் டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் கோவையில் பட்டப்படிப்பு பயில விண்ணப்பித்துள்ளார். இதனை அறிந்த அவரது கணவர் செங்கவி அவரது குடும்பத்தோடு சென்று மணி மொழி மற்றும் அவரது தாயை கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ள னர். இதுகுறித்து மணிமொழி கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் செங்கவி குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செங்கவி மீண்டும் மணிமொழி மற்றும் அவரது தாயை தாக்கி யுள்ளார். இதில் மணிமொழியின் தாய்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனமுடைந்த மணி மொழி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு  முன் தமிழக முதலமைச்சர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத் துள்ளார். கடிதம் எழுதிய பிறகு வீடி யோவில் அவர்  விஷம் அருந்துவதை யும் பதிவு செய்துள்ளார்.  மணிமொழி விஷம் அருந்தியதை  அறிந்த அப் பகுதி பொதுமக்கள் அவரை  மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச் சைப் பிரிவில் சேர்த்தனர். இதனைத்  தொடர்ந்து மருத்துவர்கள் மணி மொழிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மணிமொழியின் தந்தை மணி கூறுகையில், தொடர்ந்து தங்கள் குடும்பத்தை அச்சுறுத்தி வரும் செங்கவியிடம் இருந்து தன் மகளுக்கு விவாகரத்து பெற்றுத் தரு மாறும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.