tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு

இளம்பிள்ளை, மே 20-  இளம்பிள்ளையில் இருந்து புலம்பெயர் தொழிலா ளர்கள்  சொந்த ஊருக்கு செல்ல அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலின் தடுப்பு நடவடிக்கை யாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர்கள் உணவு, தங்க இடமின்றி வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கு மாறு புலம் பெயர் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்த தன் அடிப்படையில் பல மாவட்டங்களில் ரயில் மூலமும், பேருந்து மூலமும் தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.  இதன்ஒருபகுதியாக, இளம்பிள்ளையை சுற்றி யுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும்  மேற்பட்டோர் தனி ரயில் மூலம் அனுப்பி வைக்கப் படவுள்ளனர். இவர்கள், சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ பரி சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.