tamilnadu

img

மதுபோதையால் நடந்த விபரீதம் : ரயிலில் அடிபட்டு நான்கு மாணவர்கள் பலி

 கோயம்புத்தூர், நவ.14-  கோவை இருகூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாண வர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலி யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக் கும் மாணவர்கள் 5 பேர் புத னன்று இருகூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, அந்த வழியாக கேரள மாநிலம், ஆலப்புழா வில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் “ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்” அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. ஆனால், போதை தலைக்கேறிய மாணவர்களுக்கு ரயில் வருவது தெரிய வில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் 5 பேர் மீதும் ரயில் மோதியது. இதில் கொடைக்கானல் பகுதி யைச் சேர்ந்த சித்திக் ராஜா (23), நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இராஜசேகர் (22), இராஜ பாளையம் பகுதியை சேர்ந்த கௌதம் (21) மற்றும் கருப்பு சாமி (22) ஆகியோர் சம்பவ  இடத்திலேயே உடல் சிதறி பலி யாகினர். மேலும் படுகாய மடைந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வேஸ்வரனை பொது மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர்.  பலியான 4 பேரின் உடல் களும் பிரேதப் பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப் பட்டன. இந்த சம்பவம் தொடர் பாக போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இச்சம்ப வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.