tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுக வாலிபர் சங்கம் மறியல் - தள்ளு முள்ளு: கைது

கோவை, பிப். 18- அனைவருக்கும் சட்ட சமூக பாதுகாப்பான வேலையை உறு திப்படுத்தக்கோரி கோவையில் வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற் பட்டது. இதனையடுத்து போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். டிஎன்பி எஸ்சி முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும். அரசுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்பிட வும், ஒப்பந்த முறை , அவுட் சோர் சிங் முறையில் பணி வழங்குவதை கைவிட வேண்டும். மேலும், அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் விற்கும் மத்திய அர சின் நடவடிக்கையை கண்டித்து கப்பற்படை எழுச்சி தினத்தில் தமிழகம் முழுவதும் கண்டன இயக்கத்திற்கு இந்திய ஜனநா யக வாலிபர் சங்கமாநிலக்குழு அறைகூவல் விடுத்தது. இதன் தொடர்ச்சியாக கோவையில் வாலிபர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகம் அருகிலிருந்து ஊர்வலமாய் புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட முயன் றனர். இதில், மத்திய, மாநில அரசு களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். இதனை யடுத்து தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைய டுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.  முன்னதாக இப்போராட்டத் திற்கு மாவட்டச் செயலாளர் கே. எஸ்.கனகராஜ் தலைமை வகித் தார். இதில், மாவட்டத் தலைவர் ஸ்டாலின்குமார், மாநிலக்குழு உறுப்பினர் பாரதி, நிர்வாகிகள் துரைசங்கர், ஓ.ராஜா, விவேகா னந்தன், அன்பரசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
இதேபோல் ஈரோடு மாவட் டம், சூரம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில், மாவட் டச் செயலாளர் எம்.சசி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. கோபிகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் செ.அஜித் குமார், பி.அன்பு ஜனாதிபதி, நகரச் செயலாளர் எஸ்.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.