tamilnadu

img

எளிய மக்களை நகரத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக

கோவை, ஆக. 17- எளிய மக்களை நகரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் கோவை மாநக ராட்சியின் நடவடிக்கையை கண் டித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆவே சமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் நீர்நிலைகளில் வசிக்கும் மக்கள் மட்டு மல்லாது, அரசு புறம்போக்கு நிலங்க ளில் தலைமுறை, தலைமுறையாக வசிக்கும் அப்பாவி ஏழை, எளிய, உழைப்பாளி மக்களை வெளியேற்றும்  நடவடிக்கையை கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக காந்தி பூங்கா அருகில் உள்ள குமாரசாமி காலனி மக்களை வெளியேற்றுவதற்கு மாநக ராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

இதனை கண்டித்து கோவை காந்திபூங்கா அருகில் சனியன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பகுதி கழக செயலாளர் சண்முகசுந்த ரம், குப்புசாமி, மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், பி.கே.சுகுமாரன், ராதா, சிபிஐ மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், சிபிஐ (எம்எல்) சார்பில் நடேசன், பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி.கலை யரசன், இனியன் உள்ளிட்ட அனைத்து கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று கோவை மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து உரை யாற்றினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத் தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று நிலம் எங்கள் உரிமை, ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் எளிய மக்களை நகரத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக் கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட  முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசு கையில், அனைத்து பணிகளும் நக ரத்தை சேர்ந்த இந்த உழைப்பாளி மக்களுக்கு இருப்பதால் நகரத்தில்  இருந்து இம்மக்களை வெளியேற்றக் கூடாது. தனித்தனியாக போராடும் இம்மக்களை ஒன்றிணைக்கும் முயற்சி யில் அனைத்து கட்சிகளும் ஈடுபட் டுள்ளோம். பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் வருகிற செவ்வாய்கிழமை குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு திரண்டு வர வேண்டும். நமது தரப்பின் நியா யத்தை இந்த அதிகாரிகளிடம் கேட் போம். நிலம் நமது உரிமை என்பதை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.