tamilnadu

img

தோட்டத்தில் புகுந்த புலி ஆடு, மாடுகளை கொன்றதால் பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி, ஜன. 28- பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை பகுதி யில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த புலி அங்கிருந்த ஆடு மற்றும் கன்று குட்டிகளை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர். இவரது தோட்டத்தில் செவ்வாயன்று அதிகாலை புலி ஒன்று புகுந்து, அத்தோட்டத்தில் கட்டியிருந்த கன்று குட்டிகள் மற்றும் 5 ஆடுகளை தாக்கியது.  இந்நிலையில் அங்கிருந்த தோட்டத்துக் காவலாளி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொள்ளாச்சி வனச்சரகர்  காசிலிங்கம் தலைமையில் புலியை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சம்ப வத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர்.