tamilnadu

சூயஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக அச்சுறுத்தல் நடவடிக்கை முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

கோவை, ஆக.16- கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக உரிமையை அந்நிய சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சூயஸ் மோசடி திட்டம் குறித்து முகநூலில் பதிவிட்ட கோவையை சார்ந்த ஒருவரை கைது செய்து அச்சுறுத்தல் நடவடிக்கையை துவங்கியுள்ளது. கோவை மாநகராட்சி குடிநீர் விநி யோக உரிமையை 21 ஆண்டுகாலத் திற்கு சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறு வனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப் பினர் இல்லாத நிலையில் அவசர, அவ சரமாக சூயஸ் நிறுவனத்துடன் ஒப் பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன என்று ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கண்டித்து இயக்கங்களை நடத்தி வருகிறது.  

இந்த ஒப்பந்தத்தின்படி குடிநீர் கட்டண உரிமை, பொதுக்குழாய் அகற்றம் ஆகியவை குறித்தும், வறட்சி காலத்தில் எப்படி 24 மணிநேரமும் சூயஸ் குடிநீரை விநியோகம் செய்யும் ஆகிய கேள்விகள் குறித்து அதி காரிகள் முரண்பாடாக சொல்லி  வருகின்றனர். கடந்த இரண்டு தினங் களுக்கு முன்பு கோவை மாநகராட்சி ஆணையர் சரவன்குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்திக்கையில் இதுகுறித்த கேள்வியை செய்தியா ளர்கள் எழுப்பியபோதும், விரிவான  கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற் பாடும் செய்கிறோம் என நழுவிச் சென்றார்.  நாளுக்குநாள் இவ்விகாரம் பூதாகர மாக எழுந்துவருகின்ற நிலையில் இதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வித மாக கைது உள்ளிட்ட நடவடிக்கை யின் மூலம் அச்சுறுத்தல் நடவடிக் கையை துவங்கியுள்ளது. இதன்ஒரு பகுதியாக சூயஸ் திட்ட ஒருங்கிணைப் பாளர் கோபாலகிருஷ்ணன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு உக்கடம் காவல்நிலையத்தில் சூயஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பு கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார்.  

இதனையடுத்து பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு தங்களின் விசுவாசத்தை காட்டும் விதமாக காவல்துறையும் அதிரடியாககளம்  இறங்கியுள்ளது. இதன்ஒருபகுதி யாக வெள்ளியன்று கரும்புக்கடை பகுதியை சார்ந்த அப்துல்ரசாக் என்ப வரை கைது செய்துள்ளது. இவர் ஹலோ ஆப்பில் சூயஸ் திட்டம் குறித்து வெளியான வீடியோவை சக நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இத னையடுத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக காவல்துறை யினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைதும் செய்தனர்.  மாநகர மக்களின் குடிநீர் உரிமை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விடை யளிக்காத கோவை மாநகராட்சி இது போன்று சமூக வலைத்தளத்தில் பகி ரப்படும் நபர்களை காவல்துறையை கொண்டு கைதுசெய்து அச்சுறுத்தல் நடவடிக்கையை துவங்கியுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.