tamilnadu

img

கோவையில் அடுத்தடுத்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம், சேலத்தை சேர்ந்த ஒருவர் கைது

கோவையில் அடுத்தடுத்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையில் நேற்று அடுத்தடுத்து 4  கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. சூலம் சேதப்படுத்ததோடு, கோவில் முன்பு தீவைக்கப்பட்டது. இதுதொடர்பாக பந்தயசாலை, உக்கடம், வெரைட்டி ஹால், துடியலுர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மற்றும் இரு சக்கர வாகன எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோவில்களை  சேதப்படுத்திய நபர் சேலத்தை  சேர்ந்த 48 வயதான கஜேந்திரன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கஜேந்திரனின்  புகைப்படத்தை கொண்டு தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சேலத்தில் இருந்த கஜேந்திரனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். கோவையில் தங்கியிருந்த கஜேந்திரன் போதையில் கோவில்களை சேதப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கஜேந்திரன் எந்த அமைப்பையோ, கட்சியையோ சாரதவர் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.