tamilnadu

img

உப்பாறு அணை அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பூர், செப். 2 – திருப்பூர் மாவட்டம் குண்ட டம் அருகே உப்பாறு அணைப் பகுதியில் 400 ஆண்டுகள் பழ மையான நடுகல் கண்டறியப் பட்டுள்ளது.  திருப்பூரில் இயங்கி வரும் வீர ராசேந்திரன் தொல்லியல் மற் றும் வரலாற்று ஆய்வு மையத் தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுச்சாமி, ரா.குமரவேல், முனைவர் ச.மு. ரமேஷ்குமார் மற்றும் சு.வேலுச் சாமி ஆகியோர் திருப்பூர் மாவட் டம் குண்டடம் வட்டத்தில் உள்ள உப்பாறு அணை அருகே கள ஆய்வு மேற்கொண்டனர். அப் போது சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்றை கண் டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதா வது: பண்டைய கொங்கு மண்ட லத்தில் கோயிலுக்கு நிலம் தானமாகக் கொடுத்தவர்க ளுக்கும், வேளாண்மை வளர்ச் சிக்காகப் புதியதாக குளம், குட்டை, ஏரிகள் மற்றும் கால் வாய்களை ஏற்படுத்தியவர்க ளுக்கும், தங்கள் ஆளுமையில் இருந்த வேளாண் நிலத்துக்கு வரி நீக்கம் செய்தவர்களுக்கும் நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. 

இவ்வாறு செயற்கரிய செயல் கள் செய்தவர்களுக்காக எடுப் பிக்கப்பட்ட நடுகல் தான் இங்கே கிடைத்துள்ளது. 110 செ.மீ. அகல மும் 85 செ.மீ. உயரமும் உடைய இந்நடுகல்லில் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் சிற்பங்கள் உள்ளன. வலது பக்கத்தில் உள்ள வீரன் தன் இடது கையை இடுப் பில் வைத்து, வலது கையில் உள்ள நீண்ட வாளைத் தரையில் ஊன்றியபடி காட்சியளிக்கிறார். இடையில் உள்ள வீரன் தன் இரு கைகளிலும் உள்ள ஆயுதத்தை நிலத்தில் ஊன்றியபடி உள்ளார். இவர்கள் இருவரும் தந்தையும் மகனுமாக இருக்கலாம். இடது கோடியில் உள்ள பெண் தன் இடது கையை இடுப்பில் வைத்தபடி, வலது கையில் பூச்செண்டை உயர்த்திய நிலையிலும் உள் ளார்.  இப்பெண்ணுக்கு அருகில் ஒரு குழந்தை தன் தாயைத் தன் இடது கையில் பிடித்தபடியும், வலது கையைத் தொங்க விட்ட நிலையிலும் உள்ளது. பெண்ணுக் கும், ஆணுக்கும் இடையில் ஒரு குடுவையும் உள்ளது. மூவரும் இடையில் மட்டும் நல்ல வேலைப் பாடுடன் கூடிய ஆடை அணிந்து, காதில் காதணிகளும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவடி வகை அணிகலன்கள் அணிந்து கம்பீ ரமாக காட்சி அளிக்கின்றனர். இவர்கள் குடும்பம் அந்தப் பகுதி யில் அதிகாரம் செய்து வந்த போது பல தானங்களைக் கோயில்களுக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் செய்தவர்கள் ஆவர். இவர்கள் செய்த தானங் கள் இவ்வுலகில் சந்திர சூரியர் உள்ளவரை நீடித்து நிலைக்க வேண்டும் என்பதற்காக நடுகல் லின் பின்புறத்தில் சந்திர சூரியர் முத்திரைகள் பொறிக்கப்பட் டுள்ளன.  இந்நடுகல்லில் எழுத்துப் பொறிப்புகள் இல்லை. ஆதலின் சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போது, இந்நடுகல் சுமார் 400 ஆண்டுகள் பழைமை யானதாகும் என்று வீரராசேந் திரன் தொல்லியல் ஆய்வு மைய இயக்குநர் பொறியாளர் சு. ரவிக் குமார் தெரிவித்தார்.