tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் 17,636 உணவு வணிக நிறுவனங்கள் பதிவு

மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், அக். 6- திருப்பூர் மாவட்டத்தில் 17,636 உணவு வணிக நிறுவனங்கள் பதிவு மற்றும் உரிமம் பெற்றுள்ள தாக மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல் குழு மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜய கார்த்திகேயன் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரத்து 590 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 34 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கடைகள், பிரியாணி கடைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவை தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கூறினார்.     மேலும், மாநகராட்சி பகுதி யில் 7 வீடுகளில் செயற்கை முறை யில் நெய் தயாரிப்பது கண்டு பிடிக்கப்பட்டு சுமார் 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 4 உணவு மாதிரிகள் எடுக்கப்பட் டது. இதேபோல், திருப்பூர் மாநக ராட்சி தெற்கு பகுதியில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப் பட்ட மாம்பழங்கள் 1,925 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப் பட்டு முறையாக அழிக்கப்பட்டது என்றார்.  

உணவுப் பாதுகாப்பு தின விழா

திருப்பூர் மாநகராட்சி வடக்கு மற்றும் தெற்கு, உடுமலை, பல் லடம் மற்றும் தாராபுரம் நகராட்சி, அவினாசி வட்டாரம் மற்றும் ஊத் துக்குளி வட்டாரம் ஆகிய பகுதி களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூ ரிகளில் உணவுப் பாதுகாப்பு தின விழா நடத்தப்பட்டது. பாதுகாப் பான உணவு, ஆரோக்கிய உணவு என்ற தலைப்பில் 15 அறிவுரைகள் கொண்ட துண்டு பிரசுரம் வழங் கப்பட்டது.

குடிநீர் நிறுவனங்கள் - ஆய்வு:

திருப்பூர் மாவட்டத்தில் 54 குடி நீர் தயாரித்து வழங்கும் நிறுவனங் கள் உள்ளன. 54நிறுவனங்க ளுக்கும் உணவுப்பாதுகாப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உண வுப் பாதுகாப்பு அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட குடி நீர் நிறுவனங்களை வாரத்திற்கு ஒன்று என ஆய்வு செய்து, அதன் அறிக்கையை இவ்வலுவலகத் திற்கு சமர்ப்பிக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. உணவுப் பாதுகாப்பு துறையால் 100 சத விகித இலக்கை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி னார்.  இக்கூட்டத்தில் உணவுப் பாது காப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜயலலிதாம் ்பிகை, துணை பதிவாளர் பால்  வளம், உதவி இயக்குநர் பேரூ ராட்சி நிர்வாகம், உதவி இயக்கு நர் ஊராட்சி நிர்வாகம், மாநக ராட்சி, நகராட்சி ஆணையர்கள், ஹோட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகி கள், பொருளாளர், தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு குழு, திருமுருகன்பூண்டி நுகர்வோர் சங்கத் தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்,  பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவன சங்க நிர்வாகிகள், திருப்பூர் மாநகர மொத்த எண்ணெய் கொள்முதல், மறு பொட்டலமிடுபவர்கள், விநி யோகஸ்தர்கள் சங்க நிர்வாகி கள் மற்றும் காங்கேயம் வட்டார தேங்காய் எண்ணெய் உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகி யோர்கள் கலந்து கொண்டனர்.