காலடி, மே 25- கேரளத்தில் சினிமா படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவால யம் செட்டை அந்தாராஷ்டிர இந்து பரி ஷத் (ஏ.எச்.பி) மற்றும் அந்தராஷ்டிரா பஜ் ரங்தள் உறுப்பினர்கள் தகர்த்தெறிந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி பகுதியில் பாசில் ஜோசப் இயக்கிய டோவினோ தாமஸ் மற்றும் புதுமுக நடிகர் ஃபெமினா நடித்த “மினல் முரளியின்” க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க பெரியாற்றின் கரை யில் இந்த செட் அமைக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடிப்பு நடைபெற வில்லை. இந்த நிலையில் பஜ்ரங்தள் உறுப்பி னர்கள் அந்த சினிமாசெட்டை உடைத்து தகர்த்தெறிந்தனர். பிரவீன் தொகாடியாவால் நிறுவப்பட்ட ஏ.எச்.பி.யின் பொதுச் செயலாளர் ஹரி பாலோட், “யாரிடமும் கெஞ்சுவதற்குப் பழக்கமில்லை என்று முகநூலில் பெருமை யாகக் கூறியுள்ளார்” மேலும் ஆதி சங்க ராச்சாரியார் மடம் அருகே கட்டப்பட்ட சர்ச் செட்டை இடிக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த சினிமா செட் அனுமதி யின்றி அமைக்கப்பட்டதாகவும் பஜ்ரங்தள் கூட்டம் வியாக்கியானம் செய்துள்ளது. பஜ்ரங்தள் வியாக்கியானத்தை காலடி ஊராட்சி உறுப்பினர் மினி பிஜூ, மறுத்த தோடு செட் அமைப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி யுள்ளார். சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பாசில் கூறுகையில், “இந்தத் தீவில் ஒரு சிறிய கோவில் உள்ளது, இதில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி கொண்டாட்டங் கள் நடைபெறும். ஆற்றின் எதிர் கரையில் புகழ்பெற்ற ஆதி சங்கராச்சாரியார் மடம் உள்ளது. நாங்கள் தற்காலிகத் தொகுப்பை அமைப்பதற்காக உள்ளூர் கோவில், ஊராட்சி மற்றும் நீர்ப்பாசனத் துறையிலி ருந்து எங்களுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது” என்றார். இந்தச் சம்பவம் குறித்து இயக்குநர் பாசில் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.