திருவனந்தபுரம், ஜூன் 5-கேரள மாநில என்ஜிஓ சங்கத்தின் 56வது மாநில மாநாடு ஜூன் 8 முதல் 11 ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன்பொது மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். மாநாட்டின் நிறைவில் நடைபெறும் மாபெரும் பேரணியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள். மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் மேயர் வி.கே.பிரசாந்த், தலைவர் இ.பிரேம்குமார், மாநாட்டு அமைப்பாளர் டி.சி.மாத்துக் குட்டி ஆகியோர் தெரிவித்தனர்.8ஆம் தேதி காலை 9.45 மணிக்குஏ.கே.ஜி அரங்கில் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும். பிற்பகல் 3.30 மணிக்கு பிரதிநிதிகள் மாநாட்டை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் துவக்கி வைப்பார். 9ஆம் தேதி காலைமுதல் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும். ’மகளிர் நிலையும் நிகழ்காலச்சூழலும்’ என்ற தலைப்பிலான கருத்த ரங்கை அமைச்சர் ஜெ.மெர்ஸிக்குட்டி அம்மா துவக்கிவைப்பார். பகல் 2 மணிக்கு நட்புறவு மாநாட்டை சிஐடியு மாநிலத் தலைவர் ஆனத்தலவட்டம் ஆனந்தன் துவக்கிவைப்பார்.
10ஆம் தேதி காலை 9 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு தொடர்ந்து நடைபெறும்.’ஊடகங்களும் ஜனநாயக மும்’ என்ற தலைப்பிலான கருத்த ரங்கை 10.30 மணிக்கு தேசாபிமானி முதன்மை ஆசிரியர் பி.ராஜீவ் துவக்கிவைப்பார். பகல் 2.30 மணிக்கு ’பொதுக்கல்வி: கேரள முன்மாதிரி’ என்ற தலைப்பில் அமைச்சர் சி.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றுவார். மாலை 6 மணிக்கு அமைச்சர் தாமஸ் ஐசக் சிறப்புரையாற்றுகிறார்.11ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பிரதிநிதிகள் மாநாடு தொடரும். கலாச்சார சங்கமம் நிகழ்ச்சியை அமைச்சர் ஜி.சுதாகரன் துவக்கிவைப்பார். பல்வேறு கலைஞர் களுக்குப் பாராட்டு. பிரபா வர்மா, குரிப்புழா ஸ்ரீகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். பிற்பகல்3 மணிக்கு குமாரன் ஆசான் சதுக்கத்திலிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுக்கும் பேரணிதுவங்கும். மாலை 4 மணிக்கு புத்தரிக் கண்டம் மைதானத்தில் நடைபெறும் பொதுமாநாட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கிவைத்துச் சிறப்புரையாற்றுவார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பொதுமாநாட்டில் பங்கேற் பார்கள்.மாநாட்டு அரங்கில் ஏற்றப்படவுள்ள கொடி ஆற்றிங்கல்லி லிருந்தும், கொடிமரம் நெய்யாற்றின் கரையிலிருந்தும் ஜூன் 7 அன்று ஊர்வலமாகக் கொண்டுவரப்படும். அன்றுமாலை 4 மணி அளவில் பாளை யத்தில் இரண்டு ஊர்வலங்களும் சங்கமிக்கும். தொடர்ந்து ஊர்வலம் புத்தரிக்கண்டம் மைதானத்தைச் சென்றடையும். சங்கத்தின் 1,49,062 உறுப்பினர்களை பிரதிநிதித் துவப்படுத்தும் 845 பேர் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இவர் களில் 233 பேர் பெண் பிரதிநிதிகள் ஆவர்.