tamilnadu

img

கேரள எல்லைகள் மூடப்பட்டன களியக்காவிளை, வாளயாறில் தீவிர சோதனை

திருவனந்தபுரம், மார்ச் 21- கோவிட் 19 வைரஸ் பீதியைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகாவை கேர ளத்துடன் இணைக்கும் எல்லைகள் மூடப்பட்டன. அதன்படி தமிழ்நாடு - கேரள எல்லைகளான களியக்கா விளையிலும், வாளயாறிலும், கர்நா டகா- கேரள எல்லையான மாதுங்கா  உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களி லும் சாலைகள் மூடப்பட்டன. வயநாட்டிலிருந்து கேஎஸ்ஆ ர்டிசி பேருந்துகளின் அனைத்து தொலைதூர சேவைகளும் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு-  கர்நாடகா மாநிலங்களுடன் எல்லை களை பகிர்ந்து கொள்ளும் வயநாடு வழியாக அவசர தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. சோதனை சாவடிக்கு வரும் அனைத்து வாக னங்களையும் சோதனையிடும் அதி காரிகள் பெரும்பாலான வாகனங்க ளை திருப்பு அனுப்பி அனுப்ப முயற்சிக்கின்றனர். வயநாட்டிலிருந்து கேஎஸ்ஆர்டி சியின் அனைத்து தொலை தூர சே வைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளன. கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டின் உதகை மாவட்டத்திற்கும் பேரு ந்துகள் செல்லவில்லை. அங்கும் இங்கும் செல்ல வேண்டியவர்கள் தங்களது பயணத்தை விரைவு படுத்துமாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். சனியன்று இரவுடன் அனைத்து வகை யான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. கோவிட் 19 கண்டறியப்பட்ட குடகுக்கு  எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் எனவும் ஆட்சியர் தெரி வித்துள்ளார்.     வயநாட்டில் பாவல்லி, தோல்பெட்டி, முத்தங்ஙா ஆகிய 3  சோதனை சாவடிகள் கர்நாடக மாநி லத்தின் குடகு மாவட்ட எல்லைகளா கும். குடகு மாவட்டத்திற்கு எக்கார ணம் கொண்டும் யாரையும் அனும திக்க வேண்டாம் என வயநாடு மா வட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குண்டல்பேட்டை உள்ளிட்ட இடங்க ளுக்கு விவசாய தேவைகளுக்காக ஆயிரக்கணக்கானோர் முத்தங்ஙா சோதனை சாவடிகை கடந்து செல்கிறார்கள். ஆனால் சனியன்று மிக குறைவான வாகனங்களே இந்த  வழியாக கடந்து சென்றன. சனியன்று  ஒருநாள் மட்டும் சாமராஜ் நகர் மா வட்டத்திற்கு முத்தங்ஙா வழியாக  வாகனங்கள் செல்ல அனுமதிக்கு மாறு வயநாடு மாவட்ட ஆட்சியர் சாமராஜ் நகர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற சூழ்நிலை தமிழ்நாடு செல்லும் வயநாட்டின் தோலாடி, சாலூர் சோதனை சாவடிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டுக்கான கேரளத்தின் முக்கிய நுழைவு வாயிலான வாள யாறில் தீவிர கண்காணிப்பு மற்றும்  சோதனைகளில் இரண்டு மாநில  அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளியன்று இரவு முதல்  பாலக்காட்டிலிருந்து வெளிமாநி லங்களுக்கான சேவையை கேஎ ஸ்ஆர்டிசி நிறுத்தியது. விவசா யம், மருத்துவம் போன்ற அவசர  தே வைகளுக்காக மட்டும் இப்போது வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் தலைமை செய லாளர்கள் கூட்டாக நடத்திய ஆலோ சனையில் சரக்கு போக்குவரத்து எந்த வகையிலும் தடைபட்டுவிடக் கூடாது என முடிவு செய்யப்பட்டு ள்ளது. அதன்படி சரக்கு வாக னங்கள் சோதனை சாவடிகள் வழி யாக வழக்கும்போல் கடந்து செல்கி ன்றன. இடுக்கி மாவட்டம் குமுளி சோ தனை சாவடியில் தீவிர முன்னெச்ச ரிக்கையும், சோதனைகளும் தொ டர்ந்து நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேரு ந்துகள் சோதனை சாவடி வரை இயக்கப்பட்டன. சனியன்று மதி யத்துடன் இந்த இயக்கமும் நிறுத்தப்பட்டன. அதேநேரத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் வழ க்கம்போல் குமுளி வழியாக இயக்க ப்படுகின்றன. சோதனை சாவடியை கடந்து இரு புறமும் வேலைகளுக்கு கடந்து செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தெர்மல் சோதனைக்குப் பிறகே அவர்கள் கடந்து செல்ல அனு மதிக்கப்படுகிறார்கள். கேரளத்தின் தெற்குப் பகுதி யின் முக்கிய சோதனைச் சாவடியான  அமரவிளையிலும், களியக்காவிளை யிலும் தீவிர கண்காணிப்பும், சோத னையும் தமிழ்நாடு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரத்திலிருந்து நாக ர்கோவிலுக்கு சனியன்று 3 கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. மதியத்துக்கு பிறகு இரு மாநில பேருந்துகளும் இய க்கப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை  இயக்கப்பட்டன. இறப்பு, மருத்துவ மனை போன்ற அவசர தேவைக ளுக்கு வருவோரை மட்டுமே எல்லை யை கடந்து செல்ல தமிழக அதிகா ரிகள் அனுமதிக்கிறார்கள்.