கொச்சி, மே 12- தனக்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்தும் மஞ்சள் பத்திரிகையாளருடன் எடுத்துக்கூற எதுவும் இல்லை எனவும், சட்ட ரீதியாக சந்திப்பதற்கான நட வடிக்கைகளை துவக்கி உள்ளதாகவும் பத்திரிகையாளர் அபர்ணா குருப் தெரி வித்துள்ளார். வெளி மாநிலங்களிலிருந்து அனுமதி யின்றி கேரளத்துக்கு வருவோர் குறித்த அபர்ணாவின் கருத்துக்கு காங்கிரஸ் பாஜகவினரும் சமூக ஊடகங்களில் இழிவு படுத்தி வருகின்றனர். இவை குறித்தும் முகநூலில் அவர் குறிப்பிட்டுள் ளதாவது: அப்படியே, இனி நடப்பவை சட்டத்தின் வழியாகவே செல்லட்டும்! கேரளத்தில் கடைசியாக வயநாட்டில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றுள்ள 7 பேரும் கோயம்பேடில் இருந்து வந்த வர்கள்தான், அபுதாபி விமானத்தில் வந்த 2 பேருக்கு நேற்று கோவிட் கண்ட றியப்பட்டது. அதாவது வெளிநாடுகளிலி ருந்தும் மாநிலங்களிலிருந்தும் வருகிற வர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கேர ளத்தின் கோவிட் தடுப்பு அமைப்புகள் கண்காணிக்கின்றன என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இவ்வாறு வெளி இடங்களிலிருந்து வருகிறவர்களை கண்காணிக்க, நோய் கண்டறிய, சிகிச்சை அளிக்க, தனிமை யில் இருக்க வசதிகள் செய்வதற்கு தயா ராக உள்ளது இம்மாநிலம். அந்த தடுப்பு ஏற்பாடுகளுக்கு நான் ஆதரவு தெரிவித் தேன். அனுமதி இல்லாமல் அனைவரை யும் அனுமதித்து, இதையெல்லாம் சீர ழிக்க ஒரு பகுதியினர் செய்துவரும் முயற்சிகளை அம்பலப்படுத்துவது செய்தியாளர் என்கிற வகையில் எனது கடமை, அதை நான் செய்தேன். அதன் காரணமாக எனக்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்தியும் வெட்டுக் கிளிக் கூட்டத்தை வரவேற்றும் பிணம் தின்னியாகிவிட்ட மஞ்சள் ஊடகத்தினரி டம் எதையும் கூறுவதற்கில்லை. ஆனால், சட்டப்படி அவர்களை எதிர்கொள்ளும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார் முதல்வருக்கும், மாநில காவல்துறை தலைவருக்கும், ஹைடெக் செல்லுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வார்த்தைகளால் பாலியல் வல்லுறவு செய்தும், இந்த முகநூல் பக்கத்திலும், பதிவுகளின் கீழும் அதல்லாத வேறு வழிகளிலும் கொலை மிரட்டல் விடுக்கும் சகோதரர்களின் விவரங்கள் கொண்ட ஸ்கிரீன் ஷாட்டுகளும் புகாருடன் சைபர்டோமிடம் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.