tamilnadu

img

கோவிட்: கேரளத்தில்  புதிய நோயாளிகள் 225 தொடர்பு மூலம் 38 ; குணமடைந்தது 209 பேர்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஞாயிறன்று 225 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 57 பேர் இதர  மாநிலங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 38பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை ஞாயிறன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது : நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 126பேர் ஞாயிறன்று குணமடைந்தனர். இதுவரை 3174 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2228 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 1,80,939பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,77,995பேர் வீடுகள்-நிறுவன கண்காணிப்பிலும் 2944பேர் மருத்துவ மனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். சனியன்று 377 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வரை 24 மணி நேரத்தில் 7461 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 2,68,218 நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 5881 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டும்.  மேலும், சமூக தொடர்பு அதிகம் உள்ள சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், பொதுநல ஊழியர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினிரின் 58,728 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 56,374 மாதிரிகள்நோய் தொற்று இல்லை என உறுதியாகின.ஞாயிறன்று மேலும் 24 கட்டுப்பாட்டு பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டன. தற்போது கேரளம் முழுவதுமாக 153 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.