கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளியன்று விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துயடுத்து நடந்த மீட்பு பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதைத்தொடர்ந்து விமான விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.