tamilnadu

img

கேரள தலைமை நீதிபதியாக எஸ்.மணிகுமார் பதவியேற்பு

திருவனந்தபுரம், அக்.12- கேரள உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி யாக எஸ்.மணிகுமார் வெள்ளியன்று பதவி யேற்றார். ஆளுநர் மாளிகை யில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான்  பதவி பிரமா ணம் செய்து வைத்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனிருந்தார். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரிஷிகேஷ் ராய் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற செல்கி றார். இந்நிலையில் சென்னை நீதிமன்ற நீதிபதியாக பணி யாற்றிய எஸ்.மணிகுமாரை கேரள நீதிமன்றத்தில் புதிய  தலைமை நீதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலி ஜியம் பரிந்துரை செய்தது.  2006இல் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நிய மிக்கப்பட்டார். முன்னதாக உதவி சொலிசிட்டர் ஜென ரல், மத்திய அரசின் மூத்த நிலைக்குழு  ஆகிய பொ றுப்புகளை  வகித்துள்ளார்.