tamilnadu

img

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமாம்.... கேரள காங்., தலைவரின் பெண்கள் விரோதப் பேச்சுக்கு பிருந்தா கண்டனம்

திருவனந்தபுரம்:
சுயமரியாதை உள்ள பெண் ஒருமுறை பாலியல் வல்லுறவுக்கு உள் ளாக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்வார் என்று காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று ஒரு கூட்டத்தில் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசுகையில், ‘மாநிலம் முழுவதும் தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக கூறித் திரிபவர் அந்த பெண்’ என சோலார் வழக்கு தொடர்பாக குறிப்பிட்டு பேசினார். ஒரு பெண் ஒருமுறை வன்புணர் வுக்கு உள்ளானதாக கூறினால் புரிந்துகொள்ளலாம். சுயமரியாதை உள்ள ஒருபெண் அப்படி நடந்தால் தற்கொலை செய்து கொள்வார். அல்லது அதை ஒருமுறை கூடகூறாத சூழ்நிலையே நமது சமூகத்தில்உள்ளது. ஆனால், இந்த பெண் மாநிலம் முழுவதும் தன்னை பாலியல் வன் புணர்வு செய்ததாக தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அந்த பெண்ணை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப் போவதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் முல்லப்பள்ளி கூறினார்.

முல்லப்பள்ளியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந் துள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், முல்லப்பள்ளியின் பேச்சு சமூகத் திற்கு அவமானம். இவர் அடிக்கடி இதுபோன்று பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது மனதில் உள்ளதே இப்படி வெளிப்படுகிறது. பெண்கள் விரோத மனப்பான்மையை யாரும் மனதில் வைத்திருப்பது ஆபத்தானது. இதுபோன்ற பெண்ணிய விரோத கருத்துக்களை வெளியிடுவது சரியானதல்ல. பாலியல் வன்புணர்வு என்பது பெண்களால் வலுக்கட்டாயமாக அடிபணியச் செய்து தாக்கப்படும் ஒன்று. இது மனித சமுதாயத்திற்கு எதிரான மிகக் கொடூரமான- கடுமையான குற்றமாகும் என்றார். கேரள மகளிர் ஆணையதலைவர் எம்.சி.ஜோசபின், முல்லப் பள்ளி மீது மகளிர் ஆணையம் வழக்குபதிவு செய்யும் என்றார். 

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளிராமச்சந்திரன் பாலியல் வன்புணர் வுக்கு ஆளானவர்கள் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைகளை வெளியிட்டுள்ளார். இது பெண்களுக்கு எதிரான வாய்மொழி வன்முறை. நீங்கள் மன்னிப்பு கேட்பதால் முடிந்து போவதல்ல இது. அவர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக இத்தகைய வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகிறார். இதேபோன்ற முறையில் பேசும் எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலாவின் ஊக்கத்தையும் கேபிசிசி தலைவர் பெறுகிறார். இது வேதனைக்குரியது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக தலைவர்களின் வார்த்தைகளையே கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால்,காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கேபிசிசி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் அவரை வெளியேற்ற அக்கட்சியின் உயர்மட்டம் முன்வர வேண்டும் எனபிருந்தா கோரினார்.