கேரளா மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடமிருந்து 1,096 கிராம் கலவை தங்கத்தை சுங்க ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இரவு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் ஜி 9454 ல் வந்த பயணிகளிடம் 1096 கிராம் இருப்பதை கண்டு பறிமுதல் செய்துள்ளனர். பயணிகள் மலக்குடலில் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர். 5 காப்ஸ்யூல் வடிவத்தில் இருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, சுங்கச் சட்டம் 1962ன் கீழ் இந்த தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் , மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.