tamilnadu

img

சென்னை புத்தகக் கண்காட்சியில் மொழியின் பெருமையை பறைசாற்றும் “கீழடி - ஈரடி” சிறப்பு அரங்கம்

கீழடி 

சென்னை, டிச. 20- 43ஆவது சென்னை புத்தகக் கண்  காட்சியில் தமிழ் மொழியின் பெரு மையை பறைசாற்றும் வகையில் “கீழடி - ஈரடி” சிறப்பு அரங்கம் அமைக்  கப்படவுள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சி  குறித்து தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.கே. முருகன், பொருளாளர் ஆ.கோமதி நாயகம் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தென் இந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் நடத்தும் 43ஆவது சென்னை புத்தகக்  கண் காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9ஆம் தேதி துவங்கி  21ஆம்  தேதி வரை 13 நாட்கள் நடைபெறு கிறது. ஆசியாவின் மிகப்பெரிய புத்த கக் கண் காட்சிகளுள் ஒன்றான சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான வாசகர்கள் வருடம் தோறும் வந்து செல்கின்றனர்.

2 கோடி புத்தகங்கள்

இந்த புத்தகக் கண் காட்சியில் சுமார் 700க்கும் மேற்பட்ட அரங்கு களில், 15 லட்சத்திற்கும் மேலான  தலைப்புகளில் 2 கோடி புத்தகங்கள்  இடம் பெற உள்ளது. வேலை நாட்க ளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்  களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக்காட்சி நடைபெறும்.

பள்ளி மாணவர்கள்...

வாசிப்பை உக்குவிக்கும் நோக்கில் 5,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும்  “சென்னை வாசிக்கி றது” என்ற நிகழ்ச்சி ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், அதிகாரிகள், ஆசி ரியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். உலகின் தொன்மையான மொழி களுள் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்பையும், பாரம்பரியத்தையும் மற்றும் திருக்குறளின் பெருமை யையும் புத்தகக் காட்சிக்கு வரும்  அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘கீழடி - ஈரடி’ என்ற தலைப்  பில் அரங்கம் ஒன்று தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு அமைய வுள்ளது.  13 நாட்களும் புத்தக வெளியீடு கள் மற்றும் தலைசிறந்த எழுத்தாளர் கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், கலை உலகினர் பங்கு பெறும் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. வழக்கம் போல் அனைத்து புத்தகங்களுக்கும் 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். 

சலுகை

சென்னையைச் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நுழைவுக் கட்டணமின்றி புத்தகக் காட்சிக்கு வரும் வகையில் அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் அனுப்பி வைக் கப்படும். அதேபோல் வாசகர்கள் அமர்வதற்கு என இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் பயணிகள் தங்க ளது பாசை காண்பித்தால் அனுமதி இலவசம். பிரபல மணல் சிற்பி பட்நாயக்கால் உருவாக்கப்படும் திரு வள்ளுவர் மணல் சிற்பம் அரங்கில் தனியாக இடம்பெறுகிறது. அங்கு திருவள்ளுவர் குறித்த அனைத்து புத்தகங்களும், பிற மொழிகளில் வெளிவந்த புத்தகங்களும் இடம்பெற உள்ளன.

புத்தகக் காட்சியின் நுழைவுக் கட்டணம் 10 ரூபாயாகும்.  மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவி யப்போட்டி, வினாடி வினா போன்  றவை பல்வேறு பிரிவுகளில் நடத்தப் பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், புத்தகங்களும் வழங்கப்படும். இளம் இயக்கு னர்களை ஊக்குவிக்கும் வகை யில் குறும்படம், சமுக நலன் மற்றும்  புத்தகம் தொடர்பான ஆவணப் படங்களை திரையிட தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டு பெறுபவர்களுக்கு 13 நாட்க ளுக்கு 100 ரூபாய் கட்டணம். மாற்றுத்  திறனாளிகள் எளிதில் பார்வையிட சக்கர நாற்காலிகள், ஏடிஎம் மையம், டெபிட், கிரெடிட் கார்டுகளின் மூலம் புத்தகம் வாங்கும் வசதிகளும் செய்  யப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சந்திப்பின் போது, துணைத் தலைவர்கள் க.நாகராஜன், ஒளி வண்ணன் உள்ளிட்ட பலர் இருந்த னர்.