tamilnadu

img

ஓசூர் அருகே கிராமமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது

கிருஷ்ணகிரி, மே 21-கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் காமன்தொட்டியை அடுத்த கோபசந்திரம் ஊராட்சிமன்றத்தில் உள்ளது ராமாபுரம். இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்து பாறை, பள்ளம் படுகுழியுமாக உள்ள சாலையை கடக்க வேண்டும். போக்குவரத்திற்கு லாயகற்ற சாலைகளில் நடந்து சென்றாலும் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. தென்பென்னையாறு பாய்ந்து செல்லும் ஆற்றோர கிராமமாக இருந்தாலும் வறட்சியால் மக்கள் குடிப்பதற்குகூட தண் ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பிரியும் சாலை ராயக்கோட்டைசாலையில் உள்ள பீர்ஜே பள்ளியில் சென்று சேர்கிறது. இந்த கிராம மக்களின் தொழில் விவசாயம். இந்த கிராமத்தின் இரு பக்கமும் காடு உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டமும் தொல்லைகளும் அதிகமாகும். தங்களின் அடிப்படைத் தேவையான தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. திராவிட கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஓட்டுக்காக மட்டும் எட்டிப் பார்க்கிறார்கள். இந்நிலையில், அந்த கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அந்த மக்களுக்கு சிவப்பு துண்டு அணிவித்து கட்சியின் மூத்த தோழர் சேதுமாதவன் கவுரவித்தார். ஓசூர் ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, எம்.எம். ராஜூ, ஜி. சீனிவாசன், பி. ராஜேந்திரன், சம்பங்கி ராமைய்யா மற்றும் லாளிக்கல் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.