tamilnadu

img

ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

ஓசூர், அக்.3- ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி ஆங்கிலத் துறையில் ‘ஜெவோஸ் இலக்கிய விழா 19’  இரண்டு நாட்கள் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. முதல் நாள்  மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.  இந்நிகழ்வில் கல்லூரியின்  ஆங்கிலதுறைத் தலைவர் முனைவர்.பழனிகுமார்  வரவேற்றார் விழாவை தொடங்கி வைத்த முதல்வர் முனைவர் முத்துமணி, “கட்டிடத்திற்கு அஸ்தி வாரம் எவ்வளவு அவசியமோ அதுபோல மாணவர்களுக்கு ஆங்கில அறிவும் அவசி யம்” என்றார். மேலும், தொடர் முயற்சி மற்றும்  பயிற்சியினால் மாணவர்கள் ஆங்கில மொழியை எளிதாக கற்கலாம் என்றும் கூறினார். கருத்தரங்கில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முதுகலை ஆங்கி லத்துறை பேராசிரியர் முனைவர் திவாகர் தாமஸ் கலந்து கொண்டார். “ஒரு மாணவ ருக்கு கிரீடமாக திகழ்வது இலக்கியமாகும். மாணவப் பருவத்தில் தவறான பழக்கத்தில்  ஈடுபடாமலும். கடமை தவறாமை, திட்டமிடலை  கற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என குறிப்பிட்டார். மாணவர்களின் தனித் திறன்களை வெளிக்கொணரும் நோக்கத்தோடு ஊமை நாடகம், அலங்கார அணிவகுப்பு, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, முகத்தில் வரை தல், பென்சிலால் மட்டும் ஓவியம் வரைதல்,  சிகை அலங்காரம், மருதாணி ஒப்பனை, காய்கறிகளின் மூலம் படம் வரைதல், தீ  இல்லாமல் சமைத்தல் உட்பட போட்டிகள் நடத்தப் பட்டு வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்  பட்டன. அதிக பதக்கங்களை வென்ற வணிக வியல் துறை மாணவர்களுக்கு தனிக் கோப்பையும் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை, இளங்கலை, முதுகலை மாணவர்கள்  ஒருங்கிணைத்தனர். நிறைவாக ஆங்கி லத்துறை உதவிப் பேராசிரியர் பவித்திரா நன்றி கூறினார்.