tamilnadu

img

சாலை-சுடுகாடு வசதியில்லா குறுக்கம் கிராமம்

கிருஷ்ணகிரி, நவ.14- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி வட்டம் நாகரசம்பட்டி ஊராட்சி யில் காவேரிப்பட்டின பிரதான சாலை யில் 10 கிலோ மீட்டரில்  பிரிந்து 3 கிலோ மீட்டர் தூரம் மண் சாலை  முடிவில் குறுக்கம் கிராமம் உள்ளது.  இங்கு அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 100 குடும்பங்களின் 400க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.  இந்த கிராமத்திற்கு பேருந்து  வசதிகூட கிடையாது. 10 ஆண்டுக ளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும்  ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பி னர் மாதலிங்கம் ஆகியோரது முயற்சி யில் ஊரின் ஒற்றையடிப்பாதை மண்  சாலையாக மாற்றப்பட்டது. தற்போது வரை சிறு மழை பெய்தா லும் சேறும் சகதியுமாக குண்டும், குழியுமாக நடந்து செல்லக் கூட தகுதி யற்றதாக காணப்படுகிறது.பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் உட்பட அனைவரும் தினமும் 3 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. அதே போல் ஊரைச் சுற்றிலும் ஏக்கர் கணக்கில் அரசு புரம் போக்கு  நிலங்கள் இருந்தும் ஊர்  சுடுகாடு  என்று எதுவும் இல்லை. இறப்ப வர்களை சாலை ஓரம், குலம் குட்டை, சிலரின் சொந்த இடங்களில் புதைத்து  வருகின்றனர். மழைக் காலங்களில் ஏரி குலங்களில் நீர் நிறம்பினால் புதைக்க கடும் சிரமம் ஏற்பட்டு வரு கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி களிடம் கேட்டுக் கொண்டதன் பேரில்  மாவட்டச் செயலாளர் பிரகாஷ் வட்ட  நிர்வாகி மாதலிங்கம், முருகன் ஆகி யோர் இது குறித்து ஆய்வு செய்த னர். மேலும் இந்த கிராமத்திற்கு தார்ச்சாலை அமைத்து பேருந்து வசதி  செய்து தர வேண்டும், சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிராகாஷ், மாதலிங்கம், முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.