கிருஷ்ணகிரி, மே 19-பால் உற்பத்தியை 50 லட்சம் லிட்டராகவும் பால் கொள்முதல் விலையைகணிசமாகவும் உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கிருஷ்ணகிரியில் ஞாயிறன்று (மே 19) சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தின் பின்னர்மாநில பொதுச் செயலாளர் முகமதுஅலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக பாலுக்கான கொள்முதல் விலை உயர்வை அறிவிக்க மறுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் மழை கடுமையாக குறைந்துள்ளதால் கால்நடை தீவனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்கும் 5 லட்சம் பால் உற்பத்தியாளர்களும் தனியாருக்கு வழங்கும் 10 லட்சம் பால் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு பசும்பாலுக்குஒரு லிட்டருக்கு 28 ரூபாய் என்றிருப்பதை 40 ரூபாயாகவும், எருமைபாலுக்கு ஒரு லிட்டருக்கு 35 என்றிருப்பதை 50 ரூபாயாகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கும், ஆரம்ப சங்கங்களுக்கும் குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் வரை பாக்கி வைத்துள்ளது. ரூ.200 கோடிக்கு மேலுள்ள இந்த பாக்கியைஉடனடியாக வழங்க வேண்டும்.பலகோடி முறைகேடுகிருஷ்ணகிரி, தருமபுரி பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆவின் பால் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதன்பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கோவையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கியதில் ஆவின் நிர்வாகத்திற்கு பணம் வராமல் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்திற்கு பால் விற்பனைக்கு பரிந்துரை செய்த ஊழல் அதிகாரிகள் மீதும் அதில்தலையிட்டுள்ள ஆளும் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்தவேண்டும்.சத்துணவு திட்டம் மேலும் இதுவரை 25 முதல் 30 லட்சம் லிட்டர் அளவிலேயே "ஆவின்" பால் கொள்முதல் உள்ளது. அதை50 லட்சம் லிட்டர் அளவிற்கு அதிகரிக்கவேண்டும். இதனால் பலர் தனியாரிடம்அடிமாட்டு விலைக்கு விற்பது தடுக்கப்படும். தமிழக முதலமைச்சரின் குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்குவதன் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் பாலை கூடுதலாக கொள்முதல் செய்திட முடியும்.நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துகபால் உற்பத்தியாளர்களுக்கு 50சதம் மானிய விலையில் தரமானகால்நடைத் தீவனங்களை வழங்கவேண்டும். தமிழகத்தில் கடும் வறட்சிஉள்ளதால் பிற பகுதிகளிலிருந்து வைக்கோல், உலர் தீவனங்கள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டிகளில் ஏற்றும் போதே பாலில் உள்ள சத்துக்களையும், அளவையும் உரிய கருவிகளில் குறித்துக் கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மேலும் காலம் கடத்தாமல் அமல்படுத்த வேண்டும்.மோசடிகள் மூலம் பால் உற்பத்தியாளர்களையும், ஆரம்ப சங்கங்களையும் பல லட்சம் அளவிற்குஏமாற்றுவதை ஆவின் நிர்வாகம் நிறுத்திட வேண்டும். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்களிடம் மனுக்களை பெற்று முதல்வரிடம் கொடுக்கப்படும். ஜூன் 28ஆம் தேதி விவசாயிகள் குறை கேட்கும் நாளில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கோரிக்கை மனுக்களை மாவட்டஆட்சியர்களிடம் கொடுக்க சங்கத்தின்மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு முகமது அலி தெரிவித்தார். பேட்டியின் போது சங்கத்தின் பொருளாளர் சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாவட்டத் தலைவர் கே.சி. ராமசாமி,பால் உற்பத்தியாளர்கள் சங்கமாவட்டச் செயலாளர் அண்ணாமலை, மாவட்டக் குழு உறுப்பினர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.