tamilnadu

img

காலமானார்

கடலூர், டிச.28- காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.சுகுமாறனின்  தாயார் வி.ஜானகி உடல் நலக்குறைவால் வெள்ளியன்று (டிச.27) காலமானார். வயது  87.  அவரின் உடல் கடலூர் மஞ்சக்குப்பம் ஆற்றங்கறை வீதியி லுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.முத்துகுமாரசாமி, ஆர்.தமிழரசன், குடியிருப்போர் நல சங்க பொதுச்செயலாளர் எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் டி.புருசோத்தமன், என்.சாசிநாதன், வை.கல்யாணசுந்தரம், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட தலைவர் டி.மண வாளன், இணை செயலாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் உடல் சனிக்கிழமை (டிச.28) பெண்ணை ஆற்றங்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

;