கிருஷ்ணகிரி, நவ.26- சூளகிரி வட்டம் பேரிகை அருகில் உள்ள சீக்கனப்பள்ளி கிராமத்தில் 100 வீடுகள் உள்ளது. இங்கு தலித் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 தலை முறைகளாக இந்த பகுதியிலுள்ள நிலங்களில் விவசா யம் செய்து வருகின்றனர். சில நாட்க ளுக்கு முன்பு தனி நபர் ஒருவர் 20 அடி சாலையை அகலப்படுத்துவ தாகக் கூறி எந்திரத்தின் மூலம் தலித் மக்கள் விவசாயம் செய்துள்ள விவ சாய பயிர்களை அழித்துள்ளார். சாலை ஓரம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 25 அடி அகலத்திற்கு 44 தலித் விவசாயிகளின் பயிர்கள் சுமார் 5 ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டது. செய்தி அறிந்த விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், சூள கிரி வட்டச் செயலாளர் முனியப்பா மாவட்டக் குழு உறுப்பினர் சீனிவா சலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஜேசிபி வாகனத்தை மறித்து தடுத்துள்ளனர். அப்போது, அரசாங் கம் சொல்லித்தான் சாலையை அகலப்படுத்துவதாகக் கூறி யுள்ளார். சாலை அகலப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எவ்வித தகவலும் இல்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அங்கு வந்த காவல்துறையினர் தலித் விவசாயிகளையும், விவசாயி கள் சங்கத் தலைவர்களையும் தரக்குறைவாக பேசியதுடன் பயிரை அழித்தவருக்கு ஆதரவாகவும் பேசியதால் கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. அப்போது, ஆளும்கட்சி நபர் தன் சொந்த நிலத்திற்காகவே 44 தலித் விவசாயிகளின் பயிர் களை நாசம் செய்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறினர். விவசாயப் பயிர்கள் சொந்த நிலங்கள் அழிப்பு குறித்து சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமாரிடமும், வட்டாட்சியர் ரெஜீனாவிடமும் பாதிக்கப்பட்ட விவ சாயிகளும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிர காஷ், வட்டத் தலைவர் எம்எம்.ராஜூ, செயலாளர் முனியப்பா, துணைத் தலைவர் சீனிவாசுலு, ஆகியோர் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அழிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், சாலை அமைக்கும் தனி யாரை தடுத்து நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், சங்க நிர்வாகிகளையும் கடுமையாக பேசிய காவல்துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியிருந்தனர். அரசு சார்பில் சாலை அமைக்க வில்லை எனவும் தனிநபர் ஒருவர் அவர் தேவைக்காக சாலை அமைக்கி றார் என்றும் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கூறி னார்கள்.