tamilnadu

img

சர்வதேச டி-20 மிதாலி ராஜ் ஓய்வு

இந்திய விளையாட்டு உலகில் கிரிக்கெட் என்றால் அது ஆடவர் கிரிக்கெட் தான் என்ற நிலைமையைத் தனது திறமையான ஆட்டத்தால் தகர்த்தெறிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ் (36) சர்வதேச டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ஓய்வுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.இருந்தாலும் 2021 உலகக்கோப்பை (ஒருநாள்) தொடருக்குத் தயாராகுவதற்காக டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 2,000 ரன்களை  அடித்த முதல் இந்தியர் மிதாலி ராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.