tamilnadu

img

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

புனேயில் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.

புனேயில் இந்தியா-இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. கேஎல் ராகுல் 36 பந்தில் 54 ரன்களும், தவான் 36 பந்தில் 52 ரன்களும், மனிஷ் பாண்டே 18 பந்தில் 31 ரன்களும், இந்திய அணிக்கு சேர்த்தார்.

இதை அடுத்து, 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 15.5ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது ஷர்துல் தாக்கூருக்கும், தொடர் நாயகன் விருது நவ்தீப் ஷைனிக்கும் வழங்கப்பட்டது. 
 

;