கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து பேட்ஸ்மேன்களும் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஐசிசி க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கிரிக்கெட் ஆட்டம் வேகமாகியுள்ளது. ஆனால், பாதுகாப்பாக உள்ளதா? சமீபத்தில் ஒரு சம்பவத்தைப் பார்த்தோம். அது மோசமானதாக ஆகியிருக்கலாம். தொழில்முறை போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர் என யார் பந்து வீசினாலும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்துக்கு ஐசிசி முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். என அதில் கூறியிருந்தார்.