காஞ்சிபுரம், மார்ச் 12- காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் குடும்ப அட்டை தாரர்கள் குறைதீர்ப்பு முகாம் மார்ச் .14 அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பு டைய குறைகள் பரிசீலிக்கப்படும். மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் இணைத்தல் தொடர்பான பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும். இந்தக் கூட்டம் காஞ்சிபுரம் வட்டம் ஏனாத்தூர் கிராமம், திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமம், உத்திர மேரூர் வட்டம் மானாம்பதி கண்டிகை, வாலாஜாபாத் வட்டம் வள்ளுவப்பாக்கம், மற்றும் குன்றத்தூர் வட்டம் வெங்கடாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. எனவே, முகாமில் இப்பகுதியைச் சுற்றியுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.