tamilnadu

img

சாதிச்சான்று, நல வாரிய அட்டை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

காஞ்சிபுரம் அடுத்த கூரம் திருப்புக்குழி பகுதியில் வாழம்இருளரின மக்களுக்கு சாதிச்சான்று, நல வாரிய அட்டை கேட்டு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு  படுத்து உறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்ருந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு  பயனாளிகளுக்குசாதிச் சான்றிதழ், நல வாரிய அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் இ. லாரன்ஸ் தலைமை தாங்கினார். மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலாளர் சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.