காஞ்சிபுரம், மே 23- நோக்கியோ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 18 நபர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அடுத்த ஒரகடம் தொழிற்பேட்டையில் செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை உள்ளது. இங்கு பல மாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி மே 22, 23 தேதிகளில் மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்தை சேர்ந்த 12 பேர், சுங்குவார்சத்திரம் திருபெரும்புதூர் வட்டத்தை சேர்ந்த 15 பேர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 42 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.