காஞ்சிபுரம்,ஏப். 19- மக்களவைத் தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.இதையொட்டி அவர் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதையொட்டி காஞ்சிபுரம் மாவட் டம் முழுவதும் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,700 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 40 பேரை கைது செய்தனர்.