காஞ்சிபுரம், ஜூன் 4- சிவகாஞ்சி காவல் நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்தின் மகன் பிரபுசங்கர் கத்தார் ஏர்லைன்சில் பணிபுரிகிறார். சிறுநீரகம், நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ள பிரபுசங்கர், சிகிச்சைக்காக இந்தியா வரவேண்டி உள்ளது. ஆனால், ஊரடங்கால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், அவர் இந்தியாவிற்கு வரமுடியாமல் உள்ளார். எனவே, தனது மகன் தொடர்பாக அந்நாட்டு மருத்துவர்கள் அளித்த கடிதங்களை பரிசீலித்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என உதவி ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.