கள்ளக்குறிச்சி, பிப். 12- அரசு மாணவியர் விடுதி காப்பாள ராக பணியாற்றும் பெண் அரசு ஊழி யருக்கு மற்றொரு ஆண் ஊழியர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலி யல் தொந்தரவு அளித்து வருவதாக வும், இதற்கு சம்மதிக்காததால் தனக்கு தொடர்ந்து பொய் புகார் கள் மூலம் தொல்லைகள் அளித்து வருவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அளவிற்கு சென்றதாகவும்தாகவும் சம்பந்தப் பட்ட பெண் ஊழியர் வாட்ஸ் அப் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை உருவாக்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவியர் விடுதி ஒன்றில் காப்பா ளராக பணியாற்றும் பெண் ஊழிய ருக்கு உளுந்தூர்பேட்டை மற்றும் அரகண்டநல்லூர் மாணவர் விடுதி யில் விடுதி காப்பாளராக பணியாற் றும் எம்.முருகேசன் (57) என்பவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலி யல் தொல்லை அளித்து வந்துள் ளார். இதனையடுத்து பெண் ஊழி யர் தன் துறை உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்துள் ளார். ஆனால் பலன் ஏதும் கிடைக்காத தால் கடந்த நவம்பர் 22ஆம் தேதி யிட்ட புகார் கடிதம் ஒன்றை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மாநில அளவிலான செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு அனுப்பி உள்ளார். மேலும் காவல்துறை ஆணையர் மகளிர் ஆணையம் உள்ளிட்டோருக் கும் புகார் மனு அனுப்பியுள்ளார். இதன் மீது நடைபெற்ற விசாரணை யையும் மேற்படி எம்.முருகேசன் சரிக் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் தொடர்ந்து பெண் ஊழி யர் பணிபுரியும் விடுதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொய் புகார்களை அளித்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பெண் ஊழியருக்கு பல்வேறு இடமாறுதல்களை அளித்தும் தன்னுடைய இச்சைக்கு பணியாததால் தொடர் தொல்லை களை அப்பெண் ஊழியருக்கு கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் புதன்கிழமையன்று (பிப். 12) வாட்ஸ்அப் மூலம் கண்ணீர் மல்க முருகேசனால் தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பட்டிய லிட்டு இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்து வீடியோ ஒன்றை வெளி யிட்டார். மேற்படி புகாருக்கு ஆளாகி யுள்ள முருகேசன் தொடர்ச்சியாக ஒரு அமைப்பின் மாநிலத் தலைவர் எனக் கூறிக்கொண்டு அதிகாரிகளை “பல மாக அனைத்து வழிகளிலும் கவ னித்து” அதன் மூலம் கீழ்நிலை ஊழி யர்களை மிரட்டி வந்துள்ளார் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் கீழ்நிலை ஊழியர்கள் இவருடைய ஊழல் முறைகேடுகளுக்கு பணியவில்லை என்றால் பொய் புகார்கள் மூலம் அவர்களுக்கு தொல்லை தருவது இவரது வாடிக்கை என்றும் கூறு கின்றனர். இது மட்டுமல்லாமல் விடுதி களுக்கு மின்கட்டணம் கட்டுவது, மாணவர்களின் உணவுகளுக்கான பொருட்கள் வாங்குவது போன்ற வற்றில் தொடர்ந்து முறைகேடு செய்து வருவதாகவும், இவருடைய பணிப்பதிவேட்டிலேயே இவருடைய பிறந்த தேதியை மாற்றி தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். இந்த பெண் ஊழியரின் வீடியோ செய்தியை அறிந்து உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எம்.ஜெய்சங்கர், வட்டச் செயலாளர் பி.மணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.நடேசன், அ.பா. பெரியசாமி உள்ளிட்டோர் நேரடியாக அப்பெண் ஊழியரை சந்தித்து சம்ப வங்கள் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினர். மேலும் பெண் அரசு ஊழியர்க ளுக்கு தொடர்ந்து முருகேசன் போன்ற கயவர்களால் பாலியல் தொல்லைகளும், அதற்கு பணியா மல் போனால் பொய் புகார்கள் மூலம் தொடர் தொல்லைகளும் தருவது அரசு அலுவலகங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், எனவே உடனடியாக புகாருக்கு உள்ளாகியுள்ள எம்.முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கையும், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டுமெனவும், பாதிக் கப்பட்ட பெண் ஊழியருக்கு துறை ரீதியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வா கத்தை வலியுறுத்தியுள்ளனர்.